காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி கழுத்தறுத்து கொலை!

காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி கழுத்தறுத்து கொலை!



One side love girl killed in Karnataka

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷீலா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

karnataka

ஆனால் மாணவிக்கு காதலில் விருப்பமில்லாததால், தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியை பின் தொடர்ந்து வந்த இளைஞர் காதலிக்க கூறி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் ஷீலா மீண்டும் மறுத்த நிலையில், அந்த இளைஞர் கத்தியை எடுத்து சீலாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய இளைஞர் அருகில் இருந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

karnataka

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஷீலா மற்றும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.