#AudioLeaked: நாமக்கல்லில் சேலை, பணத்திற்காக காவலரை உல்லாசத்திற்கு அழைத்த பெண் பாலியல் தொழிலாளி.. ஆடிப்போன அதிகாரிகள்.. ! 

#AudioLeaked: நாமக்கல்லில் சேலை, பணத்திற்காக காவலரை உல்லாசத்திற்கு அழைத்த பெண் பாலியல் தொழிலாளி.. ஆடிப்போன அதிகாரிகள்.. ! 



namakkal-police-officer-speech-with-prostitute-broker-a

 

தனிப்பிரிவு காவலரை பாலியல் தொழில் நடத்தி வரும் பெண்மணி தனது வாடிக்கையாளராக பெண்களுடன் உல்லாசமாக இருக்க அழைப்பு விடுத்து பேசிய சர்ச்சை ஆடியோ லீக்காகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் ரவி. இவர் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதுகுறித்த ஆடியோவில் பாலியல் தொழில் செய்யும் பெண்மணி காவலரை மாமா என்று அழைத்து, தன்னிடம் பெண்கள் இருப்பதாக அழைக்கிறார். 

கல்லூரி பெண்ணும், வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்மணி சேலை மற்றும் மகளின் படிப்பு செலவுக்காக உல்லாசத்திற்கு தயாராக இருப்பதாகவும், அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்றும், இன்று சென்றுவிட்டால் வர தாமதம் ஆகும். ஆகையால், நீங்கள் உல்லாசமாக இருக்க வந்து செல்ல வேண்டும். சரக்கு கூட வாங்கிவிட்டு வரவேண்டாம். இங்கேயே வெளிநாட்டு சரக்கு உள்ளது என்கிறார். 

namakkal

அந்த காவல் அதிகாரியோ பாலியல் தொழில் பெண்ணின் பேச்சுக்கு பதில் பேச்சாக, நான் மாவட்ட ஆட்சியர் வெள்ளம் செல்லும் இடத்தை பார்வையிட வந்துள்ளதால் அங்கு வந்துள்ள்ளேன்.  ஆகையால் என்னால் இன்று வர இயலாது என்று கூறுகிறார். பாலியல் தொழிலிலும் பலர் பாக்கி வைத்து செல்வதாக பெண் புலம்ப, காவலரோ நான் உன் மடியில் தலைவைத்து விடிய விடிய ஒருநாள் சோக கதை கேட்கிறேன் என்று கூறுகிறார்.

நீங்கள் தான் அன்பாக பேசுகிறீர்கள், பிற அதிகாரிகள் இவ்வாறு பேசுவது இல்லை. நீங்கள் கட்டாயம் வரவேண்டும். வந்தால் விடிய விடிய பேசலாம் என்று பெண்மணி கூற, அதிகாரி எனக்கு உன்னைப்போல ஒரு ஆள் கிடைக்கவில்லை. இவ்வாறாக எனக்கு அன்றே கிடைத்திருந்தால் தங்கத்தை போல தங்கியிருப்பேன் என்று கூறுகிறார். இதுகுறித்த ஆடியோ படுவைரலாகி வருகிறது. இது காவல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.