நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிய நக்கீரன் கோபால் அதிரடி கைது!.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிய நக்கீரன் கோபால் அதிரடி கைது!.



nakeeran-gopal-arrest


நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார்.

புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மாணவிகளை பாலியல் முறைகேடுகளுக்கு உட்படுவதற்கு அழைத்து கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான செய்தியில் ஆளுநரை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் அவர்களை இன்று காலை சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.