19 வயது கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. உணவு, குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து நண்பர்கள் அதிர்ச்சி செயல்.!

19 வயது கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. உணவு, குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து நண்பர்கள் அதிர்ச்சி செயல்.!



Mumbai BARC Employee Quarters College Girl Gang Raped 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருந்து வேலைபார்த்து வரும் பணியாளர்கள், குடும்பத்துடன் தங்குவதற்கு குடியிருப்புகள் உள்ளன. 

இந்த குடியிருப்பில் தங்கியிருந்து வேலை பார்த்துவரும் தனது தந்தையை பார்க்க, 19 வயது கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வருகை தந்துள்ளார். 

இதே நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் நபரின் மகனுடன் கல்லூரி மாணவிக்கு அறிமுகம் இருக்கிறது. இருவரின் தந்தையும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததால், குடும்ப ரீதியான நட்பு தொடர்ந்துள்ளது. 

கடந்த 15ம் தேதி இளைஞனின் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட, கல்லூரி மாணவியின் தந்தையும் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் தனது தந்தையுடைய நண்பரின் வீட்டில் கல்லூரி மாணவி தங்கியுள்ளார். 

19 வயது கல்லூரி மாணவி, அவரது தந்தையின் நண்பர் மகன், அவரின் நண்பர் என மூவர் இருந்த நிலையில், நள்ளிரவு 10 மணியளவில் மூவரும் உணவு அருந்தியுள்ளனர். 

உணவில் திட்டமிட்டு கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. உணவை சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த கல்லூரி மாணவி மயங்கிவிடவே, அவரை இருவர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மயக்கம் தெளிந்து எழுந்த பெண்மணி தன்னிலை உணர்ந்து, அதே குடியிருப்பில் தங்கியுள்ள தனது தோழியின் உதவியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர், கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.