மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்!!



Mother Kill her daughter in Trichy

திருச்சியை சேர்ந்த அன்னக்கிளி என்பவரது 35 வயதுடைய மகள் மஞ்சுளா. இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். மஞ்சுளா அவர் வசிக்கும் பகுதியில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறிது காலமாக மஞ்சுளா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது ஊர்க்காவல் படை வேலையை விட்டுள்ளார். பின்னர், இவர் அடிக்கடி தனது தாய் அன்னக்கிளி உடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அன்னக்கிளியிடம் சொல்லாமல் மஞ்சுளா அரியனாம்பேட்டைக்கு சென்றுள்ளார். இதனால் அரியனாம்பேட்டைக்கு  சென்ற அன்னக்கிளி மஞ்சுளாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கு அழைத்துள்ளார்.

ஆனால் மஞ்சுளா தாய் அன்னக்கிளி உடன் வராமல் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அன்னக்கிளி இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது பெரிய கல்லை எடுத்து மஞ்சுளாவின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் தொட்டியம் போலீஸ் ஸ்டேஷனில் அன்னக்கிளி சரண் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து அன்னக்கிளி விசாரித்து வருகிறார்கள்.