சீமானெல்லாம் எங்களுக்கு தூசி போல - அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடன் திருமணம் செய்வதாக பழகி, அத்துமீறி, 7 க்கும் மேற்பட்ட முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார் என நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான புகார் குற்றச்சாட்டு கடந்த 14 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.
விசாரணை தீவிரம்
இதன்பேரில் சீமானிடம் வளசரவாக்கம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் உதவியாளர், வீட்டின் உதவியாளர் காவல்துறையினர் வழங்கிய சம்மனை கிழித்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளும் திமுக அரசுக்கு எதிராக தான் வைக்கும் குற்றசாட்டுகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாமல், இது பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் கூறி வருகிறார். மேலும், தான் எந்த விதமான குற்றமும் செய்யவில்லை என சீமான் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: பழிவாங்க சதிச்செயல்? - சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு குற்றசாட்டு.!
அமைச்சர் பதில்
இந்நிலையில், சீமானின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "சீமானை நாங்கள் தூசு போல சமாளிப்போம். அவருக்கு எதிரான வழக்கின் பின்னணியில் திமுக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் விசாரணை நடைபெறுகிறது. இதற்கும் - திமுக பின்புலத்தில் இருப்பதற்கும் எந்த சம்பந்தம்?" என கூறினார்.
இதையும் படிங்க: சம்மனை இங்கே ஒட்டிச் செல்லுங்கள் - சீமான் வீடு முன் பிரத்தியேக பதாகை.!