#BigBreaking: தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை.. மயிலாடுதுறை மீனவர் படுகாயம்..!!

#BigBreaking: தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை.. மயிலாடுதுறை மீனவர் படுகாயம்..!!



mayiaduthurai fisher man shooted by indian cops

இந்திய கடற்படையினர் மயிலாடுதுறை மீனவரை சுட்டதால், அவர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர் மன்னார்வளைகுடா பகுதியில் தனது முன்பிடி படகில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இந்திய கடலோர காவல்துறை தனது வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மீனவரின் படகை நிறுத்த முயற்சித்துள்ளது. 

அப்போது அதிகாரிகளின் உத்தரவை மீறி செயல்பட்டு படகில் இருந்தவர் தப்பித்துச்செல்ல முயற்சிக்கவே, அதிகாரிகள் துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரியவருகிறது. அதில் மயிலாடுதுறை சார்ந்த மீனவரின் மீது துப்பாக்கி குண்டுகள் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

அவர் தற்போது சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மீனவர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முந்தைய காலங்களில் சிங்கள கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது இந்தியக் கடலோர காவல்படை தமிழக மீனவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.