காதலித்த பெண்ணை தனியாக வரவழைத்து, தந்தையுடன் சேர்ந்து மகன் செய்த காரியம்! வெளிச்சத்திற்கு வந்த உச்சகட்ட கொடூரம்!

காதலித்த பெண்ணை தனியாக வரவழைத்து, தந்தையுடன் சேர்ந்து மகன் செய்த காரியம்! வெளிச்சத்திற்கு வந்த உச்சகட்ட கொடூரம்!


man-killed-girl-for-love-issue

சென்னை பள்ளிக்கரணையில் வேங்கைவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹென்றி ஜயசில் என்ற நபர் மது அருந்த சென்றுள்ளார்.அங்கு மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சேவியர் அருள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அமல்ராஜ் இருவரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் ஹென்றி கழுத்தில் தங்கச் செயின் அணிந்து இருப்பதை கண்ட இருவரும் அவரிடம் நெருக்கமாக பேசி நண்பர்களாகி ஆட்டோவில் பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர.

பின்னர் போதையில் இருந்த ஹென்றியின் தங்கசெயினை எடுத்துக் கொண்டு அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து ஏரியில் வீசியுள்ளனர். அதனை தொடர்ந்து ஏரியில் பிணம் ஒன்று மிதப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அமுல்ராஜ் மற்றும் சேவியர் அருள் ஆகியோரை கைது செய்தனர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

Murder

அதாவது சேவியர் அருள் இதற்கு முன் தனது மகன் மைக்கேல் விஜய் காதலித்த பெண்ணையும் கொலை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சபானா என்ற பெண் பள்ளிக்கரணையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார், அப்பொழுது அவருக்கு மைக்கேல் விஜயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமான நிலையில் மைக்கேலை  திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சேவியர் அருள்  மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அப்பெண் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்த நிலையில் தொல்லை தாங்காமல் அவரை கொலை செய்ய திட்டமிட்டு,  பெரும்பாக்கம் ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்று மயக்கமடைய செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் நைலான் கயிற்றால் கை, கால்களை கட்டி ஏரியில் தூக்கி போட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து போலீசார் அமுல்ராஜ். மைக்கேல் விஜய் மற்றும் சேவியன் அருள் ஆகியோரை கைது செய்துள்ளனர்.