குடிகாரர்களே உஷார்.. குடிப்பதை கண்டித்ததால் விரக்தி..! கணவன் எடுத்த முடிவால் கருகிய மனைவியின் வாழ்க்கை.!!

குடிகாரர்களே உஷார்.. குடிப்பதை கண்டித்ததால் விரக்தி..! கணவன் எடுத்த முடிவால் கருகிய மனைவியின் வாழ்க்கை.!!


man commited suicide for family disturbing

குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் கணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் தலக்குளம் கீழவிளியைச் சார்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் வாடகைக்கு வேன் ஓட்டிவந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே குடி பழக்கத்திற்கு அடிமையான சுபாஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

இதனை அவரின் மனைவி வாணி மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்த கண்டிப்பின் காரணமாக சுபாஷ் விஷம் அருந்தியதாக தெரிய வருகிறது. இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில், மயங்கிய நிலையில் கிடந்த சுபாஷை நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

kanyakumari

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியாகி இருந்த சுபாஷ் சிகிச்சை பலனின்றி நேற்றைய இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரணியல் காவல்நிலையத்தில் அவரது மனைவி புகாரளித்ததை தொடர்ந்து, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபானம் அருந்துவோர் இனியாவது தன் குடும்பத்தையும், மனைவியையும் நினைத்துப்பார்த்தால் மிகவும் நல்லது. இல்லையெனில் மற்றொரு குடும்பத்தில் இதுபோன்ற பரிதாபம் நிகழ வாய்ப்புள்ளது. மதுபழக்கத்தை கைவிடாதோரின் நிலை என்னவாகும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.