விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
தலித் சிறுவனின் மீது சிறுநீர் கழித்து அட்டூழியம்; மதுரையில் சாதிய தீண்டாமை கொடூரம்.!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சிங்கம்பட்டி கிராமத்தில் 16 வயதுடைய சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் இருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரான கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, நிதிஷ் உட்பட சிலர், சிறுவனை மதுபானம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை சாதிய ரீதியாக இழிவாக பேசியவர்கள், சிறுவனை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், ஒருகட்டத்தில் சிறுவனின் மீது சிறுநீர் கழித்தும் அவமதித்து இருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், புகாரை அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிறுநீர் கழித்து அட்டகாசம்
தற்போது ஊடகங்களில் இவ்விசயம் வெளியாகியுள்ள நிலையில், கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "மதுரையில் தலித் சிறுவனுக்கு நடந்தேறிய சாதிய தீண்டாமை அவலத்தை #நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறோம்! #மதுரைமாவட்டம்_உசிலம்பட்டி சங்கம்பட்டி கிராமத்தில்,கடந்த 16-ஆம் தேதி தலித் சிறுவனை அப்பகுதியை சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி,பிரம்மா, சந்தோஷ்,நிதிஷ்,மணிமுத்து ஆகியோர்கள் சேர்ந்து மது வாங்கச் சொல்லி காட்டயம் படுத்திருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக தலித் சிறுவனை கொடூரமாக தாக்கியும், சாதிரீதியாக கொச்சையாக பேசியும் சிறுநீர் கழித்தும் உள்ளது
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகளை அறுத்து சமபந்தி விருந்து; இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்.!
பேரவலத்தின் உச்சம்.
சாதிய தீண்டாமை பிரச்சனை தீர்வு வேண்டும்
கடந்த மூன்று நாட்களாக வழக்கு பதிவுச் செய்யாத நிலையில் 18-ஆம் தேதி தோழர் சி.கா.தெய்வா வழக்கறிஞர், விசிக பெண் நிர்வாகிகள் சேர்ந்து உசிலம்பட்டி DSP அவர்களை சந்தித்து அழுத்தும் கொடுத்த பின்பு உசிலம்பட்டி நகர் காவல்நிலை குற்ற எண்:26/2025- #SCST_வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை ஒரு குற்றவாளிகளை கூட கைது செய்யப்படவில்லை ஏன்? மாவட்ட ஆட்சியர் தலித் மக்கள் பிரச்சனையில் மெத்தனமாக உள்ளதாக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர் குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர், மதுரை மாவட்டத்தில் சம்மிகாலமாக நடந்தேறி வரும் சாதிய தீண்டாமை பிரச்சனைக்கு சரியான தீர்வு இனியாவது காணப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தலித் சிறுவனுக்கு நடந்தேறிய சாதிய தீண்டாமை அவலத்தை #நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறோம்!#மதுரைமாவட்டம்_உசிலம்பட்டி
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) January 19, 2025
சங்கம்பட்டி கிராமத்தில்,கடந்த 16-ஆம் தேதி தலித் சிறுவனை அப்பகுதியை சேர்ந்த கிஷோர்,
உக்கிரபாண்டி,பிரம்மா,
சந்தோஷ்,நிதிஷ்,மணிமுத்து ஆகியோர்கள்… pic.twitter.com/CGb8XFJahe
இதையும் படிங்க: "ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் ஜாதி., 10 பேர் சேர்ந்து என்னை தாக்கினார்கள்" - இளைஞர் கண்ணீர் பேட்டி.!