சென்னையை ஊர் என்பதா? உயிர் என்பதா? முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்!!



m-k-stalin-about-chennai-day-2023

ன்று 384 ஆம் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  
அதில் :-

"பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை?

சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்!

வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'!" என்று பதிவிட்டிருந்தார்.