முடிந்தால் இதனை தடுத்துப்பார்... சவால் விட்ட காதலி.! காதலன் செய்த காரியதால் நின்றுபோன திருமணம்.!

முடிந்தால் இதனை தடுத்துப்பார்... சவால் விட்ட காதலி.! காதலன் செய்த காரியதால் நின்றுபோன திருமணம்.!



Lover stopped young women marriage

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபர் பிரபல நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்த 20 வயதான இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சதீஷ்குமார், தனது காதலியிடம், என்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த பெண், நான் எனது பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன். உன்னால் முடிந்தால் எங்கள் திருமணத்தை தடுத்துப்பார் என்று சவால் விட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண்ணுக்கு, அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் இவர்களின் திருமணம் சடங்குகள் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் மணமேடையில் வந்து அமர்ந்தனர். இருவீட்டார் முன்னிலையில் மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றார்.

அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், சினிமா பட பாணியில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டிப்பறித்து, தனது காதலியின் கழுத்தில் கட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமக்கள் வீட்டார், சதீஷ்குமாரை மடக்கிப்பிடித்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட விடாமல் தடுத்தது அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த தாலியை பறித்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலரிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சதீஷ் கூறுகையில் முடிந்தால் எனது திருமணத்தை தடுத்துப்பார் என மணப்பெண் சவால் விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், தாலி கட்டும் நேரத்தில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்து மணப்பெண் கழுத்தில் கட்ட முயன்றேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் இரு விட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணமகன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். திருமண ஏற்பாடுக்கு தாங்கள் செய்த செலவுக்கான பணத்தை மணமகள் வீட்டாரிடம் இருந்து வாங்கி தரும்படி கூறினார். அதற்கு மணப்பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். அந்த பெண்ணை காதலனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். ஆனால் மணப்பெண், சதீஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்துவிட்டார். இதனால் நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. திருமணம் நின்றுபோனதால் மண்டபத்துக்கு வந்திருந்த இருவீட்டாரின் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.