காதல் மனைவி விஷம் குடித்து தற்கொலை.. காரணம் என்ன.?

காதல் மனைவி விஷம் குடித்து தற்கொலை.. காரணம் என்ன.?



love-marriage-wife-suicide-in-dharmapuri

தர்மபுரி மாவட்டம் சாமி செட்டிபட்டி அருகே உள்ள போலன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன், இவரும் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Dharmapuri

இந்த நிலையில் கடந்த நவம்பர் நான்காம் தேதி மோகன பிரியா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டார். இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Dharmapuri

இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.