இயற்கை ஆர்வலரின் ஆர்வக்கோளாறால் பரிதாபம்; குழந்தையை ஈன்றெடுத்து தாய் பரிதாப பலி.!

இயற்கை ஆர்வலரின் ஆர்வக்கோளாறால் பரிதாபம்; குழந்தையை ஈன்றெடுத்து தாய் பரிதாப பலி.!



Krishnagiri Mad Nature Activist Wife Died Delivery at Home Watching YouTube 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண்மணி லோகநாயகி. இவரின் கணவர் மாதேஷ். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில், லோகநாயகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, இயற்கை ஆர்வலராக இருந்து வரும் மாதேஷ், மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் யூட்யூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததாக தெரிய வருகிறது. 

Krishnagiri

இதில் குழந்தையும் நல்லபடியாக பிறந்த நிலையில், லோகநாயகிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.