சேலத்தில்... பொது நிகழ்ச்சியில்... "நான் நிறைய சிகரெட் பற்ற வைச்சிருக்கேன்" என பேசிய கே.என்.நேரு...!
சேலத்தில்... பொது நிகழ்ச்சியில்... "நான் நிறைய சிகரெட் பற்ற வைச்சிருக்கேன்" என பேசிய கே.என்.நேரு...!
சேலத்தில் நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் "நான் நிறைய சிகரெட் பற்ற வைத்திருக்கின்றேன்" என திமுக அமைச்சர் கே.என்.நேரு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 1.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அரசு பெண் செவிலியர் ஒருவர் குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை பற்ற வைக்க தீப்பெட்டியை உரசினார்.அப்போது தீக்குச்சி எரிந்து இரு முறை அணைந்தது. இதை பார்த்த அங்கிருந்த அமைச்சர் கே.என்.நேரு, தீப்பெட்டியை குடுமா, நான் நிறைய சிகரெட் புடிச்சிருக்கேன் என கூறி மெழுகுவர்த்தியை பற்ற வைத்தார்.
இதைத் தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு நல பெட்டகம், முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கும் ஆனை, மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி போன்ற நலத்திட்டங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் போன்றோர் கலந்து கொண்டனர்.