மதுபோதையில் புதுமாப்பிள்ளையான நண்பனை படுகொலை செய்த நட்பு.. நட்பே துணை பரிதாபம்.!

மதுபோதையில் புதுமாப்பிள்ளையான நண்பனை படுகொலை செய்த நட்பு.. நட்பே துணை பரிதாபம்.!


Kanyakumari Youngster Kills by Friend When Both are Drunken Liquor Alcohol

கன்னியாகுமரி நகரில் உள்ள சகாய மாதா தெருவில் வசித்து வருபவர் கவாஸ்கர் (வயது 37). இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கவாஸ்கருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் கவாஸ்கர் ராஜா என்பவரின் வீட்டில் மதுபானம் அருந்தியுள்ளார். 

அப்போது, ராஜாவுடன் போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவாஸ்கரை கழுத்தில் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவாஸ்கரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், கவாஸ்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

kanyakumari

இந்த விஷயம் தொடர்பாக கன்னியாகுமரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கவாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.