உள்வாங்கிய கன்னியாகுமரி கடல்; பாறைகளை கண்டுகளிக்கும் பொதுமக்கள்..!

உள்வாங்கிய கன்னியாகுமரி கடல்; பாறைகளை கண்டுகளிக்கும் பொதுமக்கள்..!



Kanyakumari Sea incoming

இந்தியாவின் தெற்கு நுழைவு வாயிலாக அமைந்துள்ள கடற்கரை நகரம் கன்னியாகுமரி. இங்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கால் உள்வாங்குவது இயல்பான ஒன்றாகும். 

நேற்று அமாவாசை தொடங்கவுள்ள நிலையில், கடல் உள்வாங்கியது. இதனால் மக்கள் ஏதும் அச்சம் கொள்ள தேவையில்லை. சிலமணிநேரத்திற்கு பின்னர் கடல் தனது இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். மக்கள் பலரும் இதனை கண்டுகளித்தனர்.

இந்த நாளில் திருச்செந்தூர் கடலில் எவ்வித மாற்றமும் இல்லை. பொதுவாகவே திருச்செந்தூர் கடல் அதிகளவு உள்வாங்கும். அலைகளின் சீற்றம் காணப்படும். கடந்த 2004 ல் சுனாமி ஏற்படுவதற்கு முன்பு திருச்செந்தூர் கடலில் அலைகள் உள்வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.