வீட்டுச்சுவர் ஏறிக்குதித்து சிறுமி பலாத்காரம்.. ஸ்மார்போனால் வந்த வினை.. இளைஞரின் பரபரப்பு செயல்.!

வீட்டுச்சுவர் ஏறிக்குதித்து சிறுமி பலாத்காரம்.. ஸ்மார்போனால் வந்த வினை.. இளைஞரின் பரபரப்பு செயல்.!



Kanyakumari Minor Girl Raped Name of Love Trap Police Arrest Culprit

17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர், சிறுமியின் இல்லத்திற்கு இரவில் சென்று ஆசை வார்த்தை கூறி அத்துமீறி நடந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூரில், பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி வசித்து வருகிறார். இவரின் கல்விக்காக பெற்றோர் ஸ்மார்போன் வாங்கி கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 24). இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

சிறுமிக்கும் - கலையரசனுக்கும் இடையே சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட, இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளனர். பின்னாளில் இந்த நட்பு காதலாகவும் மலர்ந்துள்ளது. பள்ளியில் பயின்று வரும் சிறுமியிடம் பல்வேறு ஆசை வார்த்தை கூறிய கலையரசன், மார்த்தாண்டம் வந்து விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். 

பின்னர், மாணவிக்கு தொடர்பு கொண்டு பேசி, ஆசையை ஏற்படுத்தி இரவில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் மதில் சுவரை ஏறிக்குதித்து மாணவியுடன் ரகசிய சந்திப்பு நடத்தி வந்த நிலையில், ஆசைவார்த்தை கூறி அத்துமீறியும் நடந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்திலும் மாணவியை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்று சுவர் ஏறி குதித்துள்ளார். 

kanyakumari

அப்போது, ஊர் மக்கள் திருடன் என நினைத்து கலையரசனை துரத்த, அவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அங்கு நடத்திய விசாரணையில் மாணவியை சீரழித்த விவகாரங்கள் தெரியவரவே, மார்த்தாண்டம் மகளிர் நிலைய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கலையரசனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.