விபத்தில் உயிரிழந்த தந்தை; தேர்வு எழுதி வந்து கண்ணீரில் மாணவி.. ஆறுதல் கூறிய தோழிகள்.!

விபத்தில் உயிரிழந்த தந்தை; தேர்வு எழுதி வந்து கண்ணீரில் மாணவி.. ஆறுதல் கூறிய தோழிகள்.!



Kallakurichi Ulunthurpet Man Died Daughter HSC Exam 

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, கருவேப்பில்லைபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன். இவரின் மகள் அம்மு. 12ம் வகுப்பு பயின்று வருகிறார். 

தற்போது அம்முவுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இன்று காலை ஆங்கில பொதுத்தேர்வு எழுதினார். 

இதனிடையே, சுப்புராயன் விபத்தில் சிக்கி மறைந்தார். இதனால் தந்தை இறந்த தருவாயிலும் சிறுமி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார். 

பின் அவரின் உறவினர் உதவியுடன் வீட்டிற்கு வந்த அம்முவை, உறவினர்கள் மற்றும் அவரின் தோழிகள் ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர். 

பள்ளியில் அவருடன் பயின்று வந்த சக மாணவிகளும் அம்முவின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினர்.