சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!
பெண்களுக்கு ரூ.5,000 வரவு! புதிதாக இணைக்கப்படும் பயனாளிகள்...... தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் பெண்களின் பொருளாதார வலிமையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத் தவணையுடன் சேர்த்து மொத்தம் ரூ.5,000 ஒரே தடவையாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருப்பது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 வரவு
சுமார் 1.31 கோடி தகுதியுள்ள பெண்களுக்கு இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரக்கூடும் என்பதால் முன்கூட்டியே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.2,000, மேலும் கோடைக்காலச் சிறப்புத் தொகையாக ரூ.2,000 ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: சற்றுமுன்.... 17 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கில் வந்தது ரூ.1000! உடனே போய் பாருங்க
அடுத்த கட்ட வாக்குறுதி – அதிகரிக்கும் தொகை?
அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இதுவரை பயன் பெறாத பல பெண்கள் திட்டத்தில் இணைவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதிய விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்
வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் பெண்கள் திரளாக விண்ணப்பிக்க வருவதால், தற்போதைக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய பயனாளிகள் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்ப நிலை – ஆன்லைனில் சரிபார்க்கலாம்
பெண்கள் தங்கள் விண்ணப்ப நிலையை kmut.tn.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் இந்த நலத்திட்டம், குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பி செயல்படுவது பொதுமக்களுக்கு அவசியம் என்பதையும் இந்த சூழ்நிலை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: BREAKING: இன்பச் செய்தி... மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு! ஒரே நாளில் ரூ. 5,000 வரவு.... முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு !!!