விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
7 வயது சிறுவனுக்கு மதுஊற்றி கொடுத்த சித்தப்பா.. வீடியோ லீக்கானதால் அதிரடி காட்டிய திருச்சி போலீஸ்.!

திருச்சி மாவட்டத்தில் வசித்து வரும் 7 வயதுடைய சிறுவன் ஒருவர், மது அருந்துவது தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாகி வந்தது.
வீடியோ வைரல்
இதனையடுத்து, திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள், விடீயோவை பதிவு செய்த நபர் குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையில், லால்குடி, உத்தமனூர் பகுதியில் வசித்து வந்த அஜித் குமார் என்பவர் விடியோவை பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திருச்சி: மதுபாட்டிலில் கிடந்த தவளை.. டார்ச் அடித்து பார்த்து அதிர்ந்த குடிமகன்.!
காவல்துறை அதிரடி
அஜித் குமார் தனது சகோதரர் மகனை மதுபானம் அருந்த கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது அம்பலமானது.
இந்நிலையில், அஜித் குமாரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருச்சி: "போலீசை கூப்டு.. என்னடா பண்ணுவ?" - நடுரோட்டில் முதியவரின் நெஞ்சில் மிதித்து தாக்குதல்..!