சதம் அடிக்க வாழ்த்துக்கள்... 105 வயது பாட்டியுடன்... 4 தலைமுறை இணைந்து கொண்டாடிய 98 வயது பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.!

சதம் அடிக்க வாழ்த்துக்கள்... 105 வயது பாட்டியுடன்... 4 தலைமுறை இணைந்து கொண்டாடிய 98 வயது பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.!



in-thirumangalam-an-old-woman-98th-birthday-was-celebra

மதுரை திருமங்கலத்தைச் சார்ந்த 98 வயது மூதாட்டி தனது 98வது பிறந்த நாளை நான்கு தலைமுறைகளுடன் கோலாகலமாக கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த  கொண்டாட்டத்தில் பாட்டியின் 15 வயது சகோதரியும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருக்கிறார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூட கோவில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு  இவரது மனைவி வேலாயி. இந்த தம்பதியினருக்கு ஆறு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ராசி தனது 93 வது வயதில் மரணம் அடைந்த நிலையில் வேலாயி தனது  மகன்கள் மற்றும் மகள்களுடன் வாழ்ந்து  வருகிறார். இந்நிலையில் 98 வயதை நெருங்கிய வேலாயிக்கு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்தனர்.

tamilnadu

மேலும் அவரது மகன்கள், மகள்கள், பேரன்கள, பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் என நான்கு தலைமுறைகளுடன் வேலாயிப் பாட்டியின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் சிறப்பம்சமாக  வேலாயிப் பாட்டியின் 105 வயது சகோதரி  கருப்பாயியும்  கலந்து கொண்டு தனது சகோதரியை வாழ்த்தினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் கூட கோவில் கிராமத்தில் உள்ள வேலாயி இல்லத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

சீக்கிரமே பாட்டி சதம் அடிக்க கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் கிராம மக்களும் கலந்து கொண்டே  வேலாயி பாட்டியிடம் ஆசி பெற்று சென்றனர். நான்கு தலைமுறை உறவுகள் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது  மனதிற்கு மகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.