16 வயது சிறுமியின் போட்டோவை மாபிங் செய்து மிரட்டல்: இன்ஸ்டா நண்பர் அதிர்ச்சி செயல்.!



in Pondicherry MInor Girl Threatening By Instagram Friend 

சிறுமியிடம் நட்பாக பேசுவதுபோல நடித்து, போட்டோவை மாபிங் செய்து மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி பகுதியில் 16 வயது சிறுமி, ஸ்மார்ட்போனில் இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளார். அதில் நட்பாக பேசும் நபர்களுக்கு பதில் அளித்தும் வந்துள்ளார். 

இதனிடையே, சிறுமிக்கு நட்பு அழைப்பு விடுத்து பேசி வந்த இளைஞர், சிறுமியின் புகைப்படத்தை பெற்று மாபிங் செய்து மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலனை வீட்டிற்கு அழைத்ததால், சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்.! 

காவல்துறை விசாரணை

இதனைக்கேட்ட பெற்றோர் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், சிறுமியை இளைஞன் கடலூருக்கு வரச்சொல்லி மிரட்டி இருக்கிறார். 

Pondicherry

இளைஞர் கைது

மாணவி அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன்பேரில், மாற்று சீருடையில் கடலூர் சென்ற புதுச்சேரி காவல்துறையினர் அதிரடியாக இளைஞனை கைது செய்தனர். விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியைச் சேர்ந்த முஜீப் அலி என்பது தெரியவந்தது.

கைதுக்கு பின் புதுச்சேரி காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட நபர், சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சிறுமிகள் தங்களின் புகைப்படத்தை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அனுப்ப வேண்டாம். ஒருவேளை மர்ம நபர் மிரட்டினாலும், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 55 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!