விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
மண்ணெண்ணெயை குளிர்பானம் என நினைத்து குடித்த சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பளுகல், செறுவள்ளூர், தேவிகோடு, பணச்சக்காளை பகுதியில் வசித்து வருபவர் அனில் (வயது 38). இவர் மாங்காய் பறிக்கும் தொழிலாளி ஆவார். அனிலின் மனைவி அருணா. தம்பதிகளுக்கு அனிருத் (5), ஆரோன் (2) என 2 மகன்கள் இருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அனில் தோட்டத்தில் மாங்காய் பறித்தபோது, மரத்தில் இருந்து தவறி விழுந்து எலும்பு முறிவை எதிர்கொண்டார். இதனால் அவர் எழுந்து நடக்க இயலாத நிலையில், அவரது மனைவியின் பராமரிப்பில் இருக்கிறார். இதனிடையே, நேற்று முன்தினம் வீட்டின் அறையில் அனில், அருணா பேசிக்கொண்டு இருந்தனர்.
சிறுவன் மரணம்
அப்போது, சிறுவன் ஆரோன் வீட்டில் விளையாடி கொண்டு இருக்க, நாற்காலியை சமையல் அறையில் வைத்து, மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்துள்ளார். அதனை குளிர்பானம் என எண்ணிய சிறுவன், குடித்து இருக்கிறார். மண்ணெண்ணெய் வீரியத்தால் சிறுவன் சிறுது நேரத்தில் அலற, வாயில் மண்ணெணெய் வாசனை வருவதை கண்டு கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா பழக்கத்தை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம்; 11ம் வகுப்பு மாணவர் மீது பள்ளி வளாகத்தில் தாக்குதல்., கொலை முயற்சி.!
குழந்தையும் மண்ணெண்ணெயை வாந்தி எடுத்தபடி, ஜூஸ் குடித்தேன், நன்றாகவே இல்லை, எதோ செய்கிறது என கூறியுள்ளான். இதனால் பதறிப்போன பெண்மணி, அக்கம் பக்கத்தினர் உதவிடுங் குழந்தையை மீட்டு காரகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி படிப்பு சான்றிதழ் தயாரித்து ஹைடெக் விபச்சாரம்; குமரியில் அதிரடி காட்டிய போலீஸ்.!