கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
தகாத உறவு.. தம்பியின் கள்ளக்காதலியை போட்டு தள்ளிய அக்கா!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தற்போது அதே பகுதியை சேர்ந்த, தன்னைவிட 10 வயது குறைவாக உள்ள ராமச்சந்திரன் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இதற்கு ராமச்சந்திரனின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராமச்சந்திரனின் அக்கா கூலிப்படையை ஏவி காளியம்மாளை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஜெயபால், கவிதா, விஜயலட்சுமி மற்றும் விவேக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.