பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் கைது!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவர் கைது!



IIT college student harassment to girl in seyyar

செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இது போன்ற குற்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

thiruvannamalai

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் சென்னை ஐஐடியில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த மாணவர், பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், சிறுமியை மிரட்டி அத்துமீற முயற்சித்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

thiruvannamalai

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.