5 மாத கர்ப்பிணி மனைவி மர்ம காய்ச்சலால் மரணம்.. கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

5 மாத கர்ப்பிணி மனைவி மர்ம காய்ச்சலால் மரணம்.. கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!



Husband suicide for wife death

திருப்பத்தூர் அருகே கர்ப்பிணி மனைவி மர்ம காய்ச்சலால் உயிரிழந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வ நகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

suicide

தற்போது இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், விஜயலட்சுமி 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதனால் யோகேஸ்வரன் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

suicide

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யோகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.