ஏய் நில்லுடி நில்லுன்னு சொல்றேன்ல... நடுரோட்டில் மனைவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்... வேலூர் அருகே பயங்கரம்!!

ஏய் நில்லுடி நில்லுன்னு சொல்றேன்ல... நடுரோட்டில் மனைவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்... வேலூர் அருகே பயங்கரம்!!


husband-murder-his-wife-for-illegal-affairs

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் - புனிதா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். புனிதா ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்சங்கர் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தினத்தன்று வழக்கம்போல் புனிதா வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை இடையிலேயே வழிமறித்த கணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புனிதாவை கடுமையாக தாக்கி விட்டு தப்பியுள்ளார்.

Husband

அங்கிருந்தவர்கள் புனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு புனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.