ராவான உடையில், போதையேற்றும் பொன்னியின் செல்வன் நடிகை.! அட்டை படத்தில் அட்டகாசமான கவர்ச்சி.!
போனை எடுங்கப்பா... கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... கதறும் மகன்...
போனை எடுங்கப்பா... கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... கதறும் மகன்...
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் - கனிமொழி தம்பதியினர். இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார். கார்த்தி பைலட்டாக வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் அதே பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் மகன் கார்த்தி தனது தந்தை மற்றும் தாய்க்கு அழைத்தும் போனை எடுக்காததால் அதிர்ச்சியடைந்த கார்த்தி தனது உறவினர் ஒருவரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அவர்கள் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. அதனையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கனிமொழி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். ஈஸ்வரன் தூக்கில் தற்கொலை செய்து கிடந்துள்ளார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.