காதல் கணவன் தலைமறைவால் மனைவி தற்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

காதல் கணவன் தலைமறைவால் மனைவி தற்கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!



Husband hide wife suicide in theni

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

Theni

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹேமலதாவும், சந்துருவும் மைனர் என்பதால் போலீசார் அறிவுரை கூற பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சந்துருவின் பெற்றோர் சந்துருவை பெங்களூரு அழைத்துச் சென்று தலைமறைவாக வைத்திருப்பதாக ஹேமலதா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்துருவை தீவிரமாக தேடி வந்தனர்.

Theni

இந்த நிலையில் கணவரை காணவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த ஹேமலதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் ஹேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஹேமலதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, காதலித்து குடும்பம் நடத்திய சந்துருவையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.