கணவர் வீட்டிற்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் ராணுவ வீரர் செய்த அதிரடி செயல்...

கணவர் வீட்டிற்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் ராணுவ வீரர் செய்த அதிரடி செயல்...



Husband fights to wifes family members in madurai

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் - கார்த்திகா தம்பதியினர். சூரிய பிரகாஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு கை குழந்தை உள்ளது. இந்நிலையில் சூரிய பிரகாஷ்க்கு தற்போது விடுமுறை தினம் என்பதால் லீவுக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற தனது மனைவியான கார்த்திகாவையும், குழந்தையையும் நமது வீட்டிற்கு போகலாம் வாங்க என கூறி அழைத்துள்ளார் சூரிய பிரகாஷ். அதற்கு கார்த்திகா வர மறுக்கவே ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இது குறித்து கார்த்திகாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் இரவு குடித்து விட்டு தனது நண்பர்களுடன் மாமியார் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரது உறவினர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.