அடக்கொடுமையே... நடத்தையில் சந்தேகம்... குழந்தைகள் கண் முன்னே அம்மி கல்லை போட்டு மனைவி கொலை... கணவன் கைது.!



husband-brutally-kills-his-wife-because-of-suspect-over

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் வயது 39. இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா(33). இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற மகளும், கோகுல் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் குடும்பத்துடன் கடந்த மூன்று மாத காலமாக தங்கி இருக்கின்றனர்.

tamilnaduமதுவிற்கு அடிமையான கோவிந்தனுக்கு தனது மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மது போதையில் இருந்த கோவிந்தன் தனது குழந்தைகள் உறங்கிய பின்னர் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

tamilnaduஇறந்த தாயின் உடலை பார்த்து குழந்தைகள் அழுததை தொடர்ந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  இறந்த ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.