மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச் லைட்டை சொருகிய கணவன் கைது..!!

மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச் லைட்டை சொருகிய கணவன் கைது..!!



Husband Arrested For Inserting Torchlight Into Wife's Genitals..

கணவருக்கு உடலுறவின் போது ஏற்பட்ட விபரீத ஆசையால், பரிதாபமாக மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான அத்திக்கோயில் மலைவாழ்மக்கள் குடியிருப்பில் வசிப்பவர் வனராஜ் (50). இவர் மலையடிவாரத்தில் இருக்கும் சங்கர்ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.  

இரண்டு திருமணங்கள் செய்து கொண்ட வனராஜ் மூன்றாவதாக கணவரை பிரிந்து தனியே இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்த ஏசுராணி (28) என்பவரை திருமணம் செய்து, அந்த தோட்டத்தில் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவில் பிள்ளைகள் இருவரும் தூங்கிய பிறகு, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டார் அறையின் மாடியில் வனராஜ் மற்றும் அவரின் மனைவி ஏசுராணி இருவரும் தங்கியுள்ளனர். 

காலையில் எழுந்து பார்த்தபோது ஏசுராணி உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்துக் கிடந்தார். இதனால் அச்சமடைந்த வனராஜ், மனைவி இறந்தது குறித்து வெகுநேரம் கழித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஏசுராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வனராஜ் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். வனராஜூம், ஏசுராணியும் இரவு மோட்டர் அறையில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அதன் பிறகு, போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தன்னால் இதற்குமேல் முடியாது என ஏசுராணி மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆனால், வனராஜ், தனது கையில் இருந்த டார்ச்லைட்டை, மனைவியின் பிறப்புறுப்பில் வைத்து அழுத்தியுள்ளார். இதனால் அலறித்துடித்த ஏசுராணி அதிக ரத்தம் வெளியேறி உயிறிழந்ததாக வனராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, வனராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.