வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!



Husband arrested for dowry harassment

ஆரணியில் வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி பகுதியில் வசித்து வருபவர் ஜெகன். இவர் அதே பகுதியில் சொந்தமாக அடகு கடை வைத்துள்ளார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

Dowry harassment

இந்த நிலையில் ஜெகன் தனது தொழிலை மேம்படுத்த முடிவு செய்துள்ளார். அதன்படி தனது மனைவியிடம் உன் வீட்டில் பணம் மற்றும் நகை வாங்கி வா என்று கூறி சண்டை போட்டு வந்துள்ளார். இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்ததால் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

Dowry harassment

இதனால் ஆத்திரமடைந்த அனிதா ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.