தனியாக வசித்த தாய் மகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்து.... நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் மனைவி கைது..!!

தனியாக வசித்த தாய் மகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்து.... நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் மனைவி கைது..!!



Husband and wife arrested for threatening nude video

வீடு புகுந்து தாய், மகளை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரியையும், அவருக்கு துணையாக இருந்த அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அண்ணா நகர் முதல் தெருவில் வசிப்பவர் பாஸ்கர் (32), இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மனைவி துர்கா (28). கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண், தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து 17 வயது மகளுடன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் ஆற்காட்டில் குடியேறினார். 

இவர் அங்குள்ள ஷூ கம்பெனியில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கர் அந்த பெண்ணிடம் வலிய சென்று பேச்சு கொடுத்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அதனை கண்டு கொள்ளவில்லை. இது குறித்து பாஸ்கரின் மனைவி துர்காவுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பாஸ்கர் அந்தப் பெண்ணை அடைய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி துர்காவுடன் சென்று அந்தப் பெண்ணின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார். கதவைத் திறந்தவுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பாஸ்கர், கதவை பூட்டி விட்டு, அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்க பெண்ணுடைய மகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டியுள்ளார். 

இது தொடர்பாக அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கர் மற்றும் அவரது மனைவி துர்கா இரண்டு பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.