அடக்கொடுமையே..! மகன் இறந்த துக்கம் தாங்காமல் ரயில் முன் பாய்ந்த தாய்.. சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் இளைஞர் மரணம்.!

அடக்கொடுமையே..! மகன் இறந்த துக்கம் தாங்காமல் ரயில் முன் பாய்ந்த தாய்.. சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் இளைஞர் மரணம்.!



Humility..! The mother jumped in front of the train unable to bear the grief of her son's death.

வேலூர் சைதாப்பேட்டையில் கணவனை இழந்து வசித்து வருபவர் காஞ்சனா. இவருக்கு ஆனந்த் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் சமீபத்தில் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் காஞ்சனா மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காஞ்சனா மகனின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று காலை காட்பாடி ரயில் நிலையம் சென்று அதிவேகமாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்கிருபா என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் காத்திருந்தார்.

son death

 இந்நிலையில் காஞ்சனா ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை நேரில் பார்த்த அந்த இளைஞர் அதிர்ச்சியில் மாரடைப்பால் அங்கேயே உயிரிழந்தார். மேலும் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.