கொடூரம்.. மகள் கண்ணெதிரே உடல் சிதறி தந்தை பலியான சம்பவம்.. பதற வைக்கும் பரபரப்பு காட்சிகள்..!

கொடூரம்.. மகள் கண்ணெதிரே உடல் சிதறி தந்தை பலியான சம்பவம்.. பதற வைக்கும் பரபரப்பு காட்சிகள்..!



horrible-incident-in-front-of-his-daughter-his-body-was

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியடிகம்பத்தில் வசித்து வருபவர் அருளானந்தம். இவர் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றியவர். இவருக்கு அருள்நிஷா என்ற மகள் ஒருவர் உள்ளார். அருள் நிஷா கல்லூரி படிப்பதால் தினமும் தனது மகளை அருளானந்தம் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கல்லூரிக்கு விட்டு அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம்போல் தனது மகளை கல்லூரியில் விடுவதற்காக அருளானந்தம் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் தேவகோட்டையில் இருந்து கோபாலபுரம் என்ற இடத்தில் உள்ள வளைவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராத விதமாக அருளானந்தம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கரமாக நேருக்கு நேர் மோதியது.

Road accident

இந்த பயங்கர விபத்தில் அருளானந்தம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருள் நிஷா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.