
gang rape
தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் விஜயலட்சுமி (28), அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதிகள், நேற்று முன்தினம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்தனர். அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எனது கணவர் கேரள மாநிலம் கொல்லத்தில் வேலை செய்து வருகிறார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை வங்கியில் போட்டு விடுவதற்கு சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கச் சொன்னார். அதன்படி வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கினேன். அப்போது, வங்கி ஊழியர் முத்துசிவகார்த்திக் என்பவர், 'ஏ.டி.எம் கார்டு வந்ததும் அழைக்கிறேன். உங்கள் நம்பரைக் கொடுங்கள்' என்றார்.
எனது நம்பரைக் கொடுத்தேன். பின்னர், என்னைப் போனில் தொடர்புகொண்ட அவர், 'பி.காம் படித்திருக்கும் உனக்கு எங்களது வங்கியில் தற்காலிக வேலை இருக்கிறது' என்றும், அதனை வாங்கிக்கொடுப்பதாகவும் கூறினார். பின்னர், வேலை சம்பந்தமாக வங்கியின் உயர் அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் எனக் கூறி, கம்பத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றுக்கு வரச்சொன்னார். என் குடும்பச் சூழல் காரணமாக எப்படியாவது இந்த வேலை கிடைத்தால் போதும் எனக் கருதி அங்கு சென்றேன். அறைக்குள் சென்றதும் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்தார். அதைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துகொண்டார்.
தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த வீடியோவை எனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி என்னை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்தார். ஒரு கட்டத்தில், அவருடன் வங்கியில் பணிபுரியும் அன்பு, பாண்டி, சதீஸ் மற்றும் பெயர் தெரியாத மூவருக்கு அனுப்பி, அந்த ஆறு பேரை அழைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்து, என்னைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார்கள். என்னை விட்டுவிடுங்கள் எனப் பல முறை கெஞ்சியும் பார்த்தேன்.
இவர்களிடம் இருந்து தப்பிக்க போடி சிலமலையைச் சேர்ந்த எனது உறவினரான போஸ் என்பவரது மகன் ஈஸ்வரனிடம் நடந்த விசயம் அனைத்தையும் கூறினேன். எனக்கு உதவி செய்வதைப் போல நடித்து, அவனும் என்னை பாலியல் வன்புணர்வு செய்தான். அதோடு, பெயர் தெரியாத அவனது நண்பனை அழைத்துவந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்து அதை செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துகொண்டான்.
ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நடந்த அனைத்தையும் தன் கணவரிடம் சொன்னார் . தன்னை பாலியல் வன்புணர்வு செய்த 12 பேர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து முத்துசிவகார்த்திக் (30), சிலமலையைச் சேர்ந்த ஈஸ்வரன் (30) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
Advertisement
Advertisement