தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்!! நாளை இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி!! மக்களே உஷார்!!

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்!! நாளை இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி!! மக்களே உஷார்!!



Full lockdown in Tamil nadu from may 24th

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவின் கோரம் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் வரும் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தும் கொரோனா பரவல் குறையவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுநர் குழு மற்றும் சட்டமன்ற பிரதிநிதிகள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறைப்படுத்த பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்கவும், தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கவும்  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் தமிழகம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை சந்திக்க உள்ளது.