அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!
#Breaking: முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீட்டில், இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனை தொடர்ந்து நடைபெறு வருகிறது. கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என கருதப்படும் 2 பேரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை பகுதியில் தங்கியிருக்கும் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த காசி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. 2021 - 2023 ஆண்டுகளில், மிரியத்தில் முக்கிய பொறுப்புகளை காசி கவனித்து வந்துள்ளார்.
முந்தைய சோதனையின் அடிப்படையில் மீண்டும் சோதனை
மின்வாரியத்தின் ஒப்பந்தம், டெண்டர் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்த அதிகாரத்தை கையில் வைத்திருந்த காசி வீட்டில், 2023 செப். 23 அன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற்றது. இதனிடையே, முன்னதாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவலின் அடிப்படையில், மீண்டும் சோதனை நடைபெறுகிறது
இதையும் படிங்க: #Breaking: சென்னையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது; காவல் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதம்.!
தேவைப்பட்டால் அவரை அழைத்து விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ள நிலையில், தற்போது காசி பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!