#Breaking: சென்னையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது; காவல் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதம்.!

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் மாநில அரசாக இருக்கும் திமுக பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மும்மொழி கொள்கை தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், மாநில அரசு அதனை தீர்க்கமாக எதிர்த்து வருகிறது. இதனால் மாநில பாஜக சார்பில் முமொழி கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரங்கள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகிக்கு பளார் விட்ட முன்னாள் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி.. அதிமுக பொதுக்கூட்டத்தில் ஷாக்.!
தமிழிசை கைது
இந்நிலையில், தென் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், மக்களை நேரில் சந்தித்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற வந்திருந்த தமிழிசை சௌந்தர்ராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர்.
காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த தமிழிசை, காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். மேலும், கையெழுத்து வாங்க வருவது எப்படி சட்டம் ஒழுங்காக இருக்கும்? அமைதியான முறையில் கையெழுத்து வாங்க செல்வோரை தடுப்பது ஏன்? என வாக்குவாதம் செய்தார்.
அனுமதி இன்றி தமிழிசை சௌந்தர்ராஜன் மக்களிடம் கையெழுத்து பெறச் சென்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிகாரிகளுடன் காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு உண்டாகி இருக்கிறது. பெண் காவலர்களும் வரவழைக்கப்ட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. மேலும், பாஜகவினர் - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு சூழல் உண்டாகி இருக்கிறது.
இதையும் படிங்க: #JustIN: வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப்படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு.!