தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... கைக்குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி.!



five-people-including-a-infant-lost-their-life-in-a-bru

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்  நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் 
செநாச்சிபட்டு  பகுதியைச் சார்ந்தவர் ராமஜெயம். இவர் தனது தம்பி ராஜேஷுடன்  சென்னையிலிருந்து தனது மனைவி ரத்னா மற்றும் தனது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ  ஆறு மாத கைக்குழந்தை ஆகியோருடன்  திருவண்ணாமலை நோக்கி திரும்பி கொண்டு இருந்தார்.

kanchipuram

இவர்கள் சென்ற கார்  காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது  மோதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது தம்பி ராஜேஷ் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ராமஜெயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்தவர்களின் உடலை  மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இருட்டில்  பழுதாகி நின்ற லாரியை பார்க்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை திறப்பு தெரிவித்து இருக்கிறது.