ஏய் கத்துனா குத்திடுவேன்... சிங்க பெண்ணாக பத்தாம் வகுப்பு மாணவி செய்த துணிகர செயல்...

ஏய் கத்துனா குத்திடுவேன்... சிங்க பெண்ணாக பத்தாம் வகுப்பு மாணவி செய்த துணிகர செயல்...



fisher-man-try-to-sexually-harassing-for-10-th-school-g

பொள்ளாச்சி பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவியின் செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. அதாவது குறித்த மாணவி இரவு டியூசன் முடித்து விட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வந்த மர்ம நபர் மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார். அந்த நபர் மாணவியை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட மாணவி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

10 th school girl

உடனே நடந்தவற்றை குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் மாணவி. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.

அவர் அந்த பகுதியில் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்து வரும் சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து போக்சோ, கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.