மகள் சொன்ன ஒத்த வார்த்தை.. பாவி.. சுத்தியலால் அடித்தே கொலை செய்த தந்தை.. பதறவைக்கும் சேலம் சம்பவம்..

மகள் சொன்ன ஒத்த வார்த்தை.. பாவி.. சுத்தியலால் அடித்தே கொலை செய்த தந்தை.. பதறவைக்கும் சேலம் சம்பவம்..



father-killed-own-daughter-near-salem-edappadi

கிறுக்கன் என கூறியதால் பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆதிகாட்டூரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மணி. இவர்களுக்கு ரமேஷ் கண்ணா என்ற மகனும், பிரியங்கா என்ற மகளும் இருந்தனர். ஊரில் காய்கறி வியாபாரம் செய்துவரும் கோபால் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இவரது மகன் ரமேஷ் கண்ணா பாட்டி வீட்டில் தங்கியிருந்து பேக்கரி ஒன்றில் வேலைக்கு சென்றுவருகிறார். அதேபோல் கோபாலின் மனைவி மணியும் கரும்பு வெட்டும் வேலைக்கா அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதனால் வீட்டில் அதிகநேரம் கோபாலும், அவரது மகள் பிரியங்காவும் மட்டுமே இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மணியை, கிராமவாசிகள் சிலர் கிறுக்கன் என அழைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் கோபாலும், அவரது மகள் பிரியங்காவும் பேசிக்கொண்டிருந்தபோது, ப்ரியங்கா தனது தந்தையை கிறுக்கன் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கோபால், அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து தனது மகளை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது தம்பிக்கு போன் செய்து, தனது மகளை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை. பின்னர் தம்பியின் வீட்டிற்கு ரத்த கரையுடன் கோபால் சென்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீட்டிற்கு சென்று பார்த்தபோது ப்ரியங்கா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் கோபாலை திட்டி தீர்த்துள்ளனர். இந்நிலையில் தனது மகளை கொலை செய்ததை உணர்ந்த கோபால், யாருக்கும் தெரியாமல் வீட்டின் மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.