தினமும் பள்ளிக்கு செல்லாமல் இளைஞர் ஒருவருடன் சுற்றி திரிந்த மகள்... தந்தை செய்த பரபரப்பு சம்பவம்.!

தினமும் பள்ளிக்கு செல்லாமல் இளைஞர் ஒருவருடன் சுற்றி திரிந்த மகள்... தந்தை செய்த பரபரப்பு சம்பவம்.!


Father gave poison to his daughter in Chennai

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜின். இவரின் மகள் அர்ச்சனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் அதே பகுதியை இளைஞர் ஒருவருடன் ஊர் சுற்றி திரிந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அர்ஜினுக்கு தெரிய வரவே தனது மகளை கண்டித்துள்ளார். ஆனால் அர்ச்சனா திருந்தாமல் தொடர்ந்து அந்த இளைஞருடன் ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜின் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து மகளின் வாயில் ஊற்றியதாக தெரிகிறது‌.

Poison

தற்போது அர்ச்சனா மிகவும் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.