தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...
இளம்பெண்ணுடன் கட்டில் உல்லாசம்.. வீடியோ பேஸ்புக்கில் லீக்கானதால் வாலிபர் விபரீதம்.. பகீர் சம்பவம்.!

திருமணம் ஆகாத இளைஞர் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 35). இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது வரை திருமணம் ஆகவில்லை.
இவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது தொடர்பான வீடியோ முகநூலில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பசுவண்ணா மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், தனது வீட்டின் தோட்டத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாளவாடி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுவன்னவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது, பசுவண்ணா பெண்ணுடன் உல்லாசமாக இருக்கையில், அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை, அவரின் நண்பர் முகநூலில் பதிவு செய்துள்ளார். இதனால் பசுவன்னவின் நண்பருக்கு வலைவீசப்பட்டுள்ளது.