ஓட்டுநர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 13 வயது சிறுவன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் துயரம்.!

ஓட்டுநர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 13 வயது சிறுவன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் துயரம்.!



erode-ammapet-13-aged-school-boy-died-slipped-form-bus

 

நண்பர்களுடன் ஆசை ஆசையாய் பேசிக்கொண்டு பள்ளிக்கு பயணித்த சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, ஆனந்தபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரின் மனைவி தங்கமணி. தம்பதியின் மூத்த மகன் திவாகரன் (வயது 13). சிறுவன் திவாகரன் பூதப்பாடியில் இருக்கும் புனித இன்னாசியர் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். 

இன்று காலை சிறுவன் பள்ளி வாகனத்தில் பயணம் செய்தபோது, காப்பாளர் இல்லாத காரணத்தால் சிறுவன் படிக்கு அருகில் பயணம் செய்துள்ளான். அவருடன் 3 மாணவர்களும் இருந்துள்ளனர். 

முன்புறம் மட்டுமே கதவு உள்ள பேருந்தில் தானியங்கு கதவு இருந்தாலும், இன்றைய பயணத்தின் போது கதவுகள் மூடப்படவில்லை. இந்நிலையில், வாகனம் அம்மாபேட்டை கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் செல்லும்போது திடீரென பிரேக் போடப்பட்டுள்ளது. 

erode

அப்போது, வாகனத்தில் இருந்த சிறுவன் திவாகரன் கீழே விழுந்துவிட, அதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து அதனை இயக்கியதால் சிறுவனின் மீது பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. 

நொடிப்பொழுதில் நடந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட, தகவல் அறிந்து வந்த சிறுவனின் தாய் மற்றும் பாட்டி கதறியழுதது காண்போரின் நெஞ்சை உலுக்கியது. 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ஓட்டுநர் ஸ்ரீ ராமராஜின் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காப்பாளரை நியமனம் செய்யாமல் பேருந்தை இயக்கினாரா? அல்லது காப்பாளர் விடுமுறை எடுத்ததால் மாற்று நபர் ஏற்பாடு செய்யலாம் அலட்சியமாக பேருந்தை இயக்கினாரா? என்ற விசாரணை நடந்து வருகிறது.