BREAKING: சென்னை, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் ED அதிரடி ரெய்டு.! தொழிலதிபர்கள் வீட்டுக்கு செக் வைத்த அதிகாரிகள்.!!!
தமிழகத்தின் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, புதுக்கோட்டையில் தீவிர சோதனை
சென்னையின் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளிலும், புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை நடைபெறும் பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!
தொழிலதிபர்கள் வீடுகளிலும் ஆய்வு
புதுக்கோட்டையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் பயாஸ் என்பவரின் இல்லத்திலும், பெங்களூருவில் எண்ணெய் வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் பாக்கியராஜுக்கு சொந்தமான வீடுகளிலும் அதிகாரிகள் விரிவான சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நிதி முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் நிதி முறைகேடு தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனை நிறைவடைந்த பிறகு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வேலையே செய்யாமல் ரூ.3.23 கோடி அவுட்". எ.வ.வேலு வீட்டில் DVAC ரெய்டு.. பின்னணியில் இருந்த 'அந்த' 4 பக்க கடிதம். தமிழகத்தையே உலுக்கும் ஊழல்..!