உருட்டுக்கட்டையால் ஒரே போடு... போதை கணவர் கொலை.. மனைவி கைது.! காவல்துறை தீவிர விசாரணை.!

உருட்டுக்கட்டையால் ஒரே போடு... போதை கணவர் கொலை.. மனைவி கைது.! காவல்துறை தீவிர விசாரணை.!



drugged-husband-killed-near-ranipet-wife-arrested-polic

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே  கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால்  மனைவி கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக  அந்தப் பெண் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் வயது 40. இவரது மனைவி பானுமதி(34), இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

tamilnadu

 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் அவரது மனைவி தனது பெற்றோர் வீடான சின்ன தகர குப்பத்தில் வந்து இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது மாமனார் வீட்டிற்கு சென்ற தேவராஜ்  மது போதையில் பானுமதி இடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.

tamilnadu

இதனால் ஆத்திரமடைந்த பானுமதி கட்டையால் தாக்கியதில்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தேவராஜ். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பானுமதி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.