ஸ்டாலின் ஐயா.... மருத்துவமனையில் 30 பேருக்கு படுக்கை வசதியில்லாமல் இருக்கிறோம்.! இயக்குநர் விருமாண்டி.!

ஸ்டாலின் ஐயா.... மருத்துவமனையில் 30 பேருக்கு படுக்கை வசதியில்லாமல் இருக்கிறோம்.! இயக்குநர் விருமாண்டி.!



director-virumandi-request-to-mk-stalin

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து நாளுக்கு நாள் பல உயிர்களை பறித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டியின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இயக்குனர் விருமாண்டியின் சகோதரர் உட்பட 30 க்கும் மேற்பட்டோருக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குனர் விருமாண்டி அவரது ட்விட்டர் பக்கத்தில், "முதல்வர் அவர்களுக்கு.. தற்போது மதுரை GH இல் இருக்கிறேன் ஐயா இங்கு சுமார் 30 க்கு மேற்பட்டோர்கள் bed இல்லாமல் இருக்கிறோம் உதவி பண்ணுங்கள் ஸ்டாலின் ஐயா" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக 30 மேற்பட்டோருக்கும் படுக்கை வசதி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.